×

தின்னூர் கிராமத்தில் மின்கம்பியில் உரசி வைக்கோல் லாரி நாசம் டிரைவர் உயிர் தப்பினார்

ஓசூர், டிச.28:  ஓசூர் அருகே, வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசியதில், தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.ஓசூர் அருகே தின்னூர் கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. தின்னூர் கிராமத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, நேற்று இரவு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தது. ஓசூர் அருகே ஆளுர் பக்கம் லாரி சென்ற போது, மின்கம்பியில் வைக்கோல் உரசியது. இதில் தீப்பிடித்து வைக்கோல் எரிந்தது. இதை கண்ட கிராம மக்கள் உடனடியாக ஓசூர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Laurie Dusty ,Dingur village ,Minggomb ,
× RELATED நீர்மோர் வழங்கல்