×

வெட்டி அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல் தொழிலாளர்கள் கவலை கலியாந்தூர் மக்கள் மனு முத்திரைக்கொல்லர் சான்றிதழ் சரிபார்ப்பு பணி திடீர் ரத்து

சிவகங்கை, டிச.25: முத்திரைக்கொல்லர் சான்றிதழ் சரிபார்ப்பு பணி மற்றும் திறனறி தேர்வு ஆகியவை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) மைவிழிச்செல்வி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள(மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களை உள்ளடக்கியது) அலுவலகங்களில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 5.4.2018 மற்றும் 28.8.2018 ஆகிய இரு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு 2.12.2018 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. 14.12.2018 நாளிட்ட மதுரை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலக கடிதத்தில் தெரிவித்தவாறு, 28.12.2018 அன்று நடைபெற இருந்த அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் திறனறி தேர்வு அறிவிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Kaliyandur ,abolishment ,
× RELATED தேனி அதிமுக நிர்வாகிகள் திடீர்...