×

சாத்தான்குளத்தில் விழிப்புணர்வு பேரணி

சாத்தான்குளம், டிச. 21:  சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் மது மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரசாரம் நடந்தது. பள்ளி தாளாளர் கிருபாகரன் தலைமை வகித்தார். தலைமைஆசிரியர் எட்வர்ட் முன்னிலை வகித்தார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சுவாமிநாதன் வரவேற்றார், சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்து பேசினார்.  பேரணி முக்கிய வீதி வழியாக சென்ற பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மதுபான தீமைகள் குறித்து கோஷமிட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில்  சாத்தான்குளம் சப்.  இன்ஸ்பெக்டர் ஆழ்வார், வெங்கடேஸ்வரபுரம் வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, உள்ளிட்ட கிராம உதவியாளர்கள்,  பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். சாத்தான்குளம் வருவாய் ஆய்வாளர் தங்கச்சாமி நன்றி கூறினார்.

Tags : Awareness rally ,Sattankulam ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி