×

காதல் திருமண ஜோடி எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்

விருதுநகர், டிச. 21: எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் திருமணம் செய்த ஜோடி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விருதுநகர் அய்யனார் நகர் தனசேகரன் மகன் கார்த்திக் ராஜா(21)வும்  அல்லம்பட்டி ரவீந்திரன் மகள் மாரீஸ்வரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தனர். மாரீஸ்வரியின் குடும்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பி, வேறு மாப்பிளை பார்த்துள்ளனர். இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்து மாலையுடன் பாதுகாப்பு கோரி எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணையில் கார்த்திக் ராஜாவிற்கு திருமண வயதான 21 வயது நிறைவடையாமல் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இருதரப்பினரையும் மாரீஸ்வரியை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்க முடிவுகள் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Tags : SSP ,
× RELATED காரைக்கால் கடற்கரையில் காவல்நிலைய பூத் அமைக்கும் பணி