×

குன்னுார் அருகே இறந்து கிடந்த சிறுத்தை

குன்னூர், டிச.21: குன்னுார் - கோத்தகிரி சாலையில் உள்ள வண்டிச்சோலையில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடு உள்ளன. இந்த காப்பு காட்டில் நாற்றங்கால் அருகே நேற்று சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த குன்னுார் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன்,வனசரகர் பெரியசாமி தலைமையிலான வனத்துறையினர்சம்பவ இடத்திற்குசென்றனர்.
 சிறுத்தையின் பாதி உடல் மட்டுமே இருந்ததால் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுத்தையின் உடலை பரிசோதித்த மருத்துவர், இறந்துபோனது இரண்டரை வயதுள்ள சிறுத்தை, உடல் சிதைந்துள்ளதால், ஆணா பெண்ணா என்பதை அறியமுடியவில்லை, காட்டுவிலங்குகள் தாக்கி இறந்துள்ளதாக கூறினார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுத்தை சம்பவ இடத்திலேயே புதைக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Kunnar ,
× RELATED குந்தா சுற்று வட்டார பகுதியில்...