×

சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு

சென்னிமலை, டிச. 20: சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நேற்று துவங்கியது.   சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி மாத விழாக்குழு சார்பில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி 8ம் ஆண்டு நிகழ்ச்சியாக மார்கழி 1ம் தேதியான நேற்று காலை சிறப்பு வழிபாடு துவங்கியது.  இதையட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோமாதா பூஜை நடந்தது. பின்னர் மூலவர் சன்னதியில் முன்பு பக்தர்கள் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர். அதைத்தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தது. இதில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மார்கழி மாத விழா குழுவினர் செய்துள்ளனர்.

Tags : Marikhi ,Chennimalai Murugan ,
× RELATED சென்னிமலை முருகன் கோயில் டோல்கேட்...