பொன்னமராவதி, டிச.20: பொன்னமராவதி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சிவமணி (76). தையல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இறந்ததையொட்டி அவரது உடலை மருத்துவ கல்லூரி பயன்பாட்டிற்காக மகன்கள் அருணகிரி, பெருமாள் ஆகியோர் தானமாக வழங்கினர். இதேபோல இவரது கண்களும் தானமாக பெறப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.