×

சிங்கம்புணரி பகுதியில் தொடரும் கொள்ளையால் மக்கள் பீதி

சிங்கம்புணரி, டிச. 20: சிங்கம்புணரி நியூ காலணி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (60). ஓய்வு வங்கி அலுவலர். மனைவி ராகினி. இவர் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடல் சிங்கம்புணரிக்கு நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, சிங்கம்புணரி பெரிய கடை வீதியில் உள்ள பலசரக்கு கடை கடந்த ஞாயிற்றுகிழமை இரவு மர்ம நபர்கள் ஓட்டை பிரித்து இறங்கி, கல்லாவில் இருந்த ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இது குறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிங்கம்புணரி கீழக்காடு ரோடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிடிஒ சுப்பிரமணியன் (78), உடல்நல குறைவு காரணமாக, மதுரையில் சிகிச்சைக்கு சென்றபோது, கடந்த 5ம் தேதி மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை திருடிச் சென்றனர். இது வரை கொள்ளை சம்பவம் குறித்து யாரும் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு தொடர் கொள்ளைச் சம்பவம் நடப்பதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Tags : robbery ,area ,Singapuneri ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...