×

மதுராந்தகம், அச்சிறுப்பாக்கத்தில் கடைகளில் பயன்படுத்திய 25 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்

மதுராந்தகம், டிச.20:  மதுராந்தகம், அச்சிறுப் பாக்கத்தில் கடைகளில் பயன்படுத்திய 25வீட்டு உபயோக சிலிண் டர்கள் பறிமுதல் செய்யப் பட்டது.மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர்களை விதிமீறி கடைகளில் பயன்படுத்திவருவதாக மதுராந்தகம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் புகார்கள் வந்தன. இதையடுத்து, புகாரின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் கமலநாதன், வட்ட வழங்கள் அலுவலர் பிரபாகரன் ஆகியோர் ஊழியர்களுடன் சென்று நேற்று மதுராந்தகம் நகர் மற்றும் அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் கடைகளில் சோதனையிட்டனர். இந்த சோதாயில் பல்வேறு கடைகளில் இருந்து 25 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அதிகாரிகள் கூறுகையில், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.அவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்களிடமிருந்து எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தொடரும் மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Tags : shops ,
× RELATED ஆந்திராவில் தேர்தலை முன்னிட்டு 17 டாஸ்மாக் மது கடைகள் மூடல்