×

மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் படுகாயம்

பெரம்பலூர், டிச.19:  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா, அந்தூரை சேர்ந்தவர் ரமேஷ். சிங்கப் பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கற்பகம். பெரம்பலூர் ரோஸ் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடந்தது. இந்த கட்டுமான பணியில் சித்தாள் வேலை பார்க்கும் பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவலூர் வெள்ளனூரை சேர்ந்த முருகேசன் மனைவி சகுந்தலா (40) உள்பட 9 பேர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று கட்டிடத்தின் 3வது தளத்தில் கட்டிடத்தின் முகப்பு பகுதியில் வேலை பார்த்து கொண்டிருந்த சகுந்தலா எதிர் பாராத விதமாக கால் தவறி 40அடி உயரமுள்ள 3வது தளத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் சகுந்தலாவின் இடுப்பு, முதுகு, கால் எலும்புகள் முறிந்தன. உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சகுந்தலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    

Tags : terrace ,
× RELATED பெங்களூரு அருகே பேடர்ஹள்ளி பகுதியில்...