×

தரங்கம்பாடி அருகே ஆபாசமாக படம் எடுத்து பெண்ணை மிரட்டி ரூ.10 லட்சம் பறிப்பு எஸ்பியிடம் புகார்

நாகை,டிச.19: பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து, அவரை மிரட்டி ரூ.10 லட்சம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக நாகை எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி சுனாமி குடியிருப்பை சேர்ந்த ராஜாமணி, நாகை எஸ்பியிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:  நான்  வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன்.  எனது மனைவி குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வெளியூர் செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த  காசி மகன் மணிகண்டன்,  சமுத்திரம் மகன் அழகேசன்,  செல்வராஜ் மகன் தமிழ்மணி பாலச்சந்தர் மகன் பாலமுருகன் மற்றும் ஆக்கூர் பார்த்திபன்  ஆகியோர்  பின் தொடர்ந்து சென்று பாலியல் தொந்
தரவு செய்துள்ளனர்.   

இந்நிலையில் எனது வீட்டிற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த மதினாவை தூண்டி விட்டு குமாரி குளிக்கும் போது  படம் பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களிடம் வழங்கி உள்ளார். அந்த நபர்கள் அந்த படங்களை என் மனைவியிடம் காண்பித்து படத்தை வாட்ஸ்அப்பில் போடுவேன் என்று கூறி மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ரூ.10 லட்சம் பறித்துள்ளனர். என் மனைவி அந்த நபர்களுக்கு கடன் பெற்று கொடுத்த பணத்தை தற்போது என்னை கேட்டு தொந்தரவு செய்கிறார்.  இது குறித்து பொறையார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. உடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : SPP ,
× RELATED எஸ்.பி.பி குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்