×

புதுப்பெண்கள் இருவர் தற்கொலை

நெல்லை, டிச. 19: பாளை ரகுமத்நகரை சேர்ந்தவர் சித்ரா(28). இவருக்கும் செங்கோட்டையை சேர்ந்தவரும், சிங்கப்பூரில் பணிபுரியும் சிவசுப்பிரமணியனுக்கும் கடந்த ஆக.31ம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து சித்ராவை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல கணவர் ஏற்பாடு செய்தார். பெற்றோரை பிரிந்துசெல்ல விரும்பாத சித்ரா, கடந்த 12ம் தேதி விஷம் குடித்து மயங்கினார். நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார். பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் தேவர்குளம் அருகேயுள்ள பன்னீரூத்தைச் சேர்ந்த கல்பனாவுக்கும்(33), எட்டாங்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்துவுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் கல்பனா பெற்றோர் வீட்டருகே கணவருடன் வசித்து வந்தார். இசக்கிமுத்து சரியாக வேலைக்கு செல்லாததால் விரக்தியடைந்த கல்பனா, நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்ெகாலை செய்து கொண்டார். தேவர்குளம் போலீசார், உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicides ,
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...