இடைப்பாடி, டிச.18: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவாக பேசிய, பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கொங்கணாபுரம் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அய்யாவு தலைமை வகித்தார். மாவட்ட தொண்டரணி இமயவரம்பன், தாமரைச்செல்வன், சேலம் பாராளுமன்ற செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், தொகுதி செயலாளர் வெங்கடாசலம், துணைச்செயலாளர் வேலு, ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ரமேஷ்குமார், பழனிசாமி, அன்பரசு, வெங்கடாஜலம், நகர செயலாளர் தனசாமி, கோவிந்தன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கொங்கணாபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.