×

பொது இடத்தில் புகை பிடித்த 8 பேருக்கு அபராதம்

நாமக்கல், டிச.18: நாமக்கல் அருகேயுள்ள எர்ணாபுரத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜகணபதி, முகமது ரபீ, இளங்கோவன், பெரியசாமி, ஜெய்கண்ணன் ஆகியோர் பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர். மொத்தம் 8 பேருக்கு தலா 100 அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல, எச்சரிக்கை பலகை வைக்காமல் புகையிலை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் 7 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 1500 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : places ,
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!