×

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை,பணம் திருட்டு

பவானி,டிச.18: பவானி அருகேயுள்ள ஜெயபாலாஜி நகரை சேர்ந்தவர் பழனியப்பன்  மனைவி பவுனாம்பாள் (70). இவர், கடந்த 10ம் தேதி பவானியிலிருந்து பழனிக்கு  பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பழனி பஸ் நிலையத்Aதில் இறங்கியபோது இவர்  பையில் வைத்திருந்த 7 பவுன் தங்கநகை மற்றும் ரொக்கம் ரூ.25 ஆயிரத்தை  காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதனால்,  மாயமான தனது நகை மற்றும் பணத்தை கண்டுபிடித்து தருமாறு பவானி போலீஸ்  நிலையத்தில் நேற்று புகார் செய்தார். இதனடிப்படையில் பவானி போலீசார் வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Jewelery ,
× RELATED சென்னை விமானநிலைய குப்பைத்...