×

வலங்கைமான் அரசு மருத்துவமனையில் 6 மாதமாகியும் உயர்கோபுர மின்விளக்கு பணி முடியாமல் தாமதம்

வலங்கைமான், டிச.18:   வலங்கைமான் அரசு மருத்துவமனையில்  உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பணிகள் துவங்கப்பட்டு ஆறுமாதங்களை கடந்த நிலையில்  இதுவரை பணிகள் முடியவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிப் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இவ் மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களின் நலன்கருதி உயர்கோபுர மின்விளக்கு அமைக்க தீர்மானிக்கப்பட்டது. பின்னர் அதற்கான பணிகள் நடைபெற டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது. உயர்கோபுர மின்விளக்கு அமைப்பதற்கான கான்கிரீட்டால் ஆன அடித்தளம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.

மேலும் மின்விளக்கு பொருத்துவதற்கான உயர் கோபுரங்களும் அப்போதே வரவழைக்கப்பட்டு மருத்துவமனை சுற்றுசுவர் அருகே கொண்டுவந்து போடப்பட்டுள்ளது. பல மாதங்களாக இப்பணிகள் முடிவுறாமல்  கிடப்பில் போடப்பட்டுள்து. பயன்பாட்டிற்கு வராமலே உயர் கோபுரங்கள் வீணாகும் சூழ்நிலை உள்ளது. எனவே மேலும் கால தாமதம் செய்யாமல் மக்களின் பயன்பாட்டிற்கு உயர்கோபுர மின்விளக்கு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Walangaiman Government Hospital ,
× RELATED வலங்கைமான் அரசு மருத்துவமனையில் 2...