×

2 பெண்களிடம் 7 பவுன் பறிப்பு

மதுரை, டிச. 16: மதுரை முத்துப்பட்டியை சேர்ந்தவர் நெல்சன். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் டூவீலரில் கடைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்து ெகாண்டிருந்தார். பின்னால் மற்றொரு டூவீலரில் வந்த 3 பேர், அவரது மனைவி அணிந்திருந்த 4 பவுன் நகை மற்றும் அவரிடமிருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பியோடினர். புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிந்து வழிப்பறிக்கும்பலை தேடி வருகின்றனர்.மதுரை எம்.கே புரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி அனுசுயா. இவர் அப்பகுதியில் நடந்து சென்றபோது, டூவீலரில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு