×

53 முதல்நிலை காவலருக்கு ஏட்டாக பதவி உயர்வு

சேலம், டிச.4: சேலம் மாநகர் மற்றும் மாவட்ட போலீசில் 53 முதல்நிலை காவலர்களுக்கு ஏட்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 1.12.2003 அன்று பணியில் சேர்ந்த 2ம் நிலை காவலர்களுக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முதல்நிலை காவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது, 15 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து, தலைமை காவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில், சேலம் மாநகர போலீசில் 23 முதல்நிலை காவலர்களும், மாவட்ட போலீசில் 30 முதல்நிலை காவலர்களும் தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் உயர் அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்டனர்.

Tags : promoter promotion officer ,
× RELATED மகளிர் அணிக்கு பாராட்டு