×

இரும்பாலையில் பிரபல கொள்ளையன் குண்டாசில் கைது

சேலம், நவ.30:  சேலம் இரும்பாலையில் வீடு புகுந்து கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை குண்டர் தடுப்பு காவலில் போலீசார் கைது செய்தனர்.சேலம் நெத்திமேடு கரியபெருமாள்கரடு பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (34). பிரபல கொள்ளையன். இவர் கடந்த மே மாதம், தனது கூட்டாளியான செல்வராஜ் என்பவருடன் சேர்ந்து இரும்பாலை அருகே தும்பிபாடியில் உள்ள வயதான தம்பதி வீட்டிற்கு சென்று, அவர்களை மிரட்டி 14 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றார்.

இதுபற்றி இரும்பாலை போலீசார் விசாரித்து, கொள்ளையர்கள் சதீஸ், செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதில், கொள்ளையன் சதீஸ் மீது ஏற்கனவே தாரமங்கலம், ஓமலூர் போலீசில் நகைபறிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் சதீசை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க இரும்பாலை இன்ஸ்பெக்டர் ரஜினி, மாநகர துணை கமிஷனர் ஷியாமளாதேவி மூலம் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையை ஏற்ற கமிஷனர், நேற்று கொள்ளையன் சதீசை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.

Tags :
× RELATED மகளிர் அணிக்கு பாராட்டு