×

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அதிமுக நிவாரண பொருட்கள் அனுப்பியது

நெல்லை, நவ. 30:  நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் கஜா புயலால் பாதித்த டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. கஜா புயலால் பாதித்த காவிரி டெல்டா பகுதிகளுக்கு நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் மாவட்ட செயலாளர் பிரபாகரன் எம்பி தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. வாகனத்தை அமைச்சர் ராஜலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் நடராஜன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரியபெருமாள், சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல்ராஜன், மாவட்ட இணை செயலாளர் ஞானபுனிதா, மாவட்ட துணை செயலாளர் பார்வதிபாக்கியம், முன்னாள் எம்எல்ஏ சக்திவேல்முருகன், மாவட்ட ஜெ.பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், புதுக்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துகுட்டி பாண்டியன்,  ஒன்றிய செயலாளர்கள் தென்காசி சங்கரபாண்டியன், நாங்குநேரி விஜயகுமார், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, களக்காடு ஜெயராமன், அம்பை செல்வராஜ், சேரன்மகாதேவி கருத்தபாண்டி, நகர செயலாளர்கள் தென்காசி சுடலை, விகேபுரம் கண்ணன், பேரூர் செயலாளர்கள் வள்ளியூர் தவசிமுத்து, களக்காடு செல்வராஜ், கீழப்பாவூர் ஜெயராமன், சுரண்டை சக்திவேல், பாசறை செயலாளர் சேர்மபாண்டி, ஜெ.பேரவை கீழப்பாவூர் பேரூர் செயலாளர் சாமிநாதன், செயற்குழு உறுப்பினர் குமுதா பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் விநாயகமூர்த்தி, விஜயநாராயணம் ராஜா உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

Tags : AIADM ,areas ,Ghaz ,
× RELATED தஞ்சாவூர் மேம்பாலத்தில் அடுத்தடுத்து...