×

பெண்ணை மிரட்டியவர் கைது

சங்கரன்கோவில், நவ. 29:  சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியகோவிலான்குளத்தை சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி ஆறுமுகத்தாய் (29). இதே ஊரை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் அருள்ராஜ் (20). ஆறுமுகத்தாயுடன் தனக்கு தொடர்பிருப்பதாக அருள்ராஜ், ஊரில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.  இதையறிந்து அதிர்ச்சியடைந்த ஆறுமுத்தாய். சம்பவத்தன்று அருள்ராஜிடம் நேரில் சென்று ஏன் இப்படி அவதூறாக பேசி வருகிறார் எனக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருள்ராஜ், ஆறுமுத்தாயை ஆபாசமாக பேசி அடித்து உதைத்து கொலைமிரட்டல் விடுத்து உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்கு பதிந்து அருள்ராஜை கைது செய்தனர்.

Tags : intimidator ,
× RELATED ஐசிஎப் பெண் ஊழியரை ஆபாச படம் எடுத்து மிரட்டியவருக்கு வலை