×

தேன்கனிக்கோட்டை அருகே தனியார் ஊழியரிடம் ₹2.50 லட்சம் வழிப்பறி

தேன்கனிக்கோட்டை, நவ.29: தேன்கனிக்கோட்டை அருகே தனியார் பால் குளிரூட்டும் நிலைய காசாளரிடம் ₹2.50 லட்சம் வழிபறி செய்த பைக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தேன்கனிக்கோட்டை அடுத்த ஓசூர் அக்ரஹாரம் கிராமத்தின் அருகே, தனியார் பால் குளிரூட்டும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோட்டை அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த முனியப்பா மகன் வேணுகோபால் (35) என்பவர் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.  கடந்த 26ம் தேதி, பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து ₹2.50 லட்சம் பணத்துடன், தேன்கனிக்கோட்டையில் உள்ள வங்கியில் பணம் கட்ட டூவீலரில் சென்றார்.

அன்னியாளம் அருகே செல்லும்போது, சிறுநீர் கழிக்க சாலையோரத்தில் டூவீலரை நிறுத்தியுள்ளார். அப்போது மற்றொரு டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இருவர், வேணுகோபால் டூவீலரில் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றனர்.
 இதுதொடர்பாக வேணுகோபால் அளித்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்ரமணி வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Tags : Dhenkanikkottai ,
× RELATED தேன்கனிக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க டிஎஸ்பி அறிவுரை