×

கஜா நிவாரணத்திற்கு 2,500 கொடுத்த சிறுமி

திருப்பரங்குன்றம், நவ.29:  திருநகர் நேதாஜி தெருவை சேர்ந்த தம்பதி பிரவின்குமார்-கலையரசி. இவர்களுடைய மகள் ரக்ஷிதா(4). இவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைத்திருந்தார். தற்போது கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். ரக்ஷிதா தனது உண்டியல் சேமிப்பு பணம் ரூ.2508ஐ கஜா புயல் நிவாரணத்திற்காக இப்பகுதியில் நிவாரண பொருட்களை சேகரித்து வழங்கும் தன்னார்வலர்களிடம் தனது தந்தையுடன் சென்று வழங்கினார். சிறுமியின் கருணை உள்ளத்தை மக்கள் பாராட்டினர்.

Tags : Khaja ,
× RELATED ஐதராபாத்தில் இருந்து ஹரியானாவிற்கு...