×

கீழ்வேளூர் அருகே மின்சாரம் கேட்டு சாலை மறியல்

கீழ்வேளூர், நவ.29: கஜா புயல் வீசி 13 நாள் கடந்த நிலையில், பாதிக்கப்பட்ட மின் கம்பங்களுக்கு பதில் மின் கம்பங்களை சரி செய்யாததை கண்டித்தும், உடன் சீரமைத்து மின்சாரம் வழங்க வேண்டும் என கோரி கூத்தூர் கிராம மக்கள் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் மண்ரோடு அருகே நேற்று காலை திடீரென சாலை மறியல் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கீழ்வேளூர் போலீசார் உடனே மின் கம்பங்கள் சீரமைக்கும் பணியை விரைந்து முடித்து மின்சாரம் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் உடன் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் நாகை - திருவாருர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Kilaveloor ,
× RELATED கீழ்வேளூர் அருகே சுவரில் பைக் மோதி டாஸ்மாக் ஊழியர் பலி