×

கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை போலீசார் கணக்கெடுப்பு

நாகர்கோவில், நவ.28: கூம்புவடிவ ஒலி பெருக்கிகள் குறித்து போலீசார் கணக்கெடுக்க தொடங்கியுள்ளனர். உச்சநீதி மன்ற உத்தரவுப்படி, வழிபாட்டு தலங்கள் உள்பட தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற எஸ்.பி நாத் உத்தரவிட்டிருந்தார். எனினும் இதுவரை 578 ஒலிபெருக்கிகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. இன்னமும் ஏராளமான வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அகற்றப்படவில்லை.இதனையடுத்து அனைத்து காவல் நிலையங்கள் வாரியாக கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் குறித்து போலீசார் விபரம் சேகரித்து வருகின்றனர். இவ்வாறு கணக்கு எடுக்கப்படும் வழிபாட்டு தலங்களில்  தலைவர் மட்டுமின்றி அனைத்து நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Census loudspeakers police census ,
× RELATED வெயில் அதிகரித்து வருவதால் கோட்டார்...