×

விபத்து வழக்கில் ஆஜராகாத முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு மணப்பாறை கோர்ட் பிடிவாரண்ட்

மணப்பாறை,நவ.28: விபத்து வழக்கில் ஆஜராகாத முத்துபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மணப்பாறை நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் உள்ள தனியார் உணவகம் அருகில் கடந்த 2.9.2016 அன்று நடந்த சாலை விபத்தில் சின்னக்காளை என்பவர் உயிரிழந்தார். இது சம்பந்தமாக அப்போதைய துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டராக இருந்த ராஜேஷ், அரியலூர் மாவட்டம் உடையார் பாளைய த்தை சேர்ந்த முருகேசன் மகன் முத்துவேல் என்பவர் மீது வழக்குப்பதிந்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.  இதையடுத்து வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக இன்ஸ்பெக்டர் ராஜேசுக்கு பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் இதுவரை விசாரணைக்கு ஆஜராக வில்லை. இதை யடுத்து தற்போது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்க்கு பிடிவாரண்டு பிறப்பித்தும், குற்றவியல் வழக்கு பதிவு செய்யவும் மணப்பாறை குற்றவியல் நடுவர் தர்மபிரபு உத்தர விட்டுள்ளார். கஜாபுயலால் பாதிக்கப்பட்டோருக்கு

Tags : inspector ,court ,
× RELATED அணைக்கட்டு அருகே 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு