×

அம்மையார் குப்பத்தில் குடிநீர் வழங்க எம்எல்ஏ நடவடிக்கை

பள்ளிப்பட்டு, நவ.28:  ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் ஊராட்சியில் சரவண தெருவில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் மோட்டார் பழுதடைந்ததால் அப்பகுதில் குடிநீர் தட்டுப்படு ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ விடம் முறையிட்டனர். இதையடுத்து உடனடியாக கிராமத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் சென்ற அவர், உடனடியாக பழுதடைந்த மின் மோட்டார் பழுது நீக்கி, உடைந்த பைப் லைன் மாற்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தார். இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவினா மற்றும் நிர்வாகிகள் கோவலன், ஏயாதி, தயாளன், சேகர், குமார், மணி, ஐயப்பன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்

Tags : MLA ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...