×

மன்னார்குடி, நீடாமங்கலம் ஒன்றியங்களில் இன்று பள்ளிகள் செயல்படும்

திருவாரூர், நவ.27: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஒன்றியங்களில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இதனையடுத்து திருவாரூர் கல்வி மாவட்டத்தை உள்ளடக்கிய திருவாரூர், கொரடாச்சேரி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான் ஒன்றியங்களுக்கு கடந்த 23ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மன்னார்குடி கல்வி மாவட்டத்தை உள்ளடக்கிய மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி,முத்துப்பேட்டை, கோட்டூர்  ஆகிய 5 ஒன்றியங்களுக்கு நேற்று வரையில் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இதில் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஒன்றியங்களில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : Schools ,Mannargudi ,Neidamangalam ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...