×

அரசு ஐடிஐ பயிற்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

நாகர்கோவில், நவ.27: நாகர்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகத்தில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு சிறு,குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய பயிற்சி வழங்கிட அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியானது ஒவ்வொரு ஆண்டும் 10,000 பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக இந்த ஆண்டு பயிற்சி வழங்கிட ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு கிண்டி தொழிற்பேட்டை ஆலந்தூர் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆலந்தூர் சாலை, கிண்டி சென்னை- 600 032 என்ற முகவரிக்கு நவம்பர் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் ெதரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ITI ,employers ,training professionals ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு