கிருஷ்ணகிரி, நவ.23: மிலாடி நபி விழாவையொட்டி, கிருஷ்ணகிரியில் 5 இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில், 9வது ஆண்டு மிலாடி நபி விழா மற்றும் 5 இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் ரஹ்மான் ஷெரீப் தலைமை வகித்தார். ஜாமீர், முன்னாள் கவுன்சிலர் பிர்தோஸ்கான், பாபுலால், கமால்கான், ரியாஸ், நதீம், இக்பால், முனவர்கான், ரபிக், சுஹேல், கலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் கராமத் வரவேற்றார். மாவட்ட அரசு தலைமை காஜி கலீல் அகமத், திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் கட்டில், மெத்தை, தலையணை, பீரோ, கேஸ் அடுப்பு, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சீர்வரிசையும் வழங்கப்பட்டது.
விழாவில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ பங்கேற்று, மணமக்களை வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக மஸ்ஜித் தலைவர்கள் முஸ்டாக் அகமத், அனைத்து டவுன் ஜமாத் கமிட்டி தலைவர் இர்பானுல்லா ஹூசைனி, ஷாபுதீன், காதர்ஹூசேன், அஸ்வத்பாஷா, அக்பர்பாஷா, பைசுல்லா, ஆசாத், முகமத்ஷப்பீர், தர்கா தலைவர் சையத்நசீர், முன்னாள் கவுன்சிலர் முபாரக், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசவன், தொழிலதிபர்கள் செல்வன், நாராயணமூர்த்தி, தமுமுக மாவட்ட தலைவர் நூர்முகமத், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் ஜாபர், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அஸ்கர்அலி ஆகியோர் பங்கேற்றனர். பைரோஸ் நன்றி கூறினார்.