×

நீடாமங்கலத்தில் தனியார் மண்டபத்தில் புளி சாதம் வழங்கல்

நீடாமங்கலம், நவ.23: கஜா புயலுக்கு நீடாமங்கலம் தாலுக்கா பகுதியில் அரசமங்கலம், கமுகக்குடி, கத்தூர், பழங்களத்தூர், முன்னாவல்கோட்டை, ஒளிமதி, கோவில் வெண்ணி உள்ளிட்ட 16 இடங்களில் 718 பேர் முன்னெச்சரிக்கையாக தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வந்தது.
 இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து தாலுகா பகுதிகளில் உணவு யாருக்கு தேவையோ அவர்களுக்கு கொண்டு சென்று வழங்கப்பட்டு வருகிறது. நேற்று 4 ஆயிரம் பேருக்கு புளி சாதம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு சமையல் செய்யும் மையத்திற்கு அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திர பாலாஜி இருவரும் சென்று உணவு தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்து அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கினர்.

Tags : hall ,Neemamangalam ,
× RELATED பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும்...