நாகை,நவ.23: நாகை கோட்டத்திற்கு உட்பட்ட 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (23ம்தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நாகை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கஜா புயல் காரணமாக நாகை கோட்ட பகுதியான நாகை, கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம் ஆகிய 4 தாலுகாவில் இன்று (23ம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.