×

கல்லூரி மாணவி கடத்தல்?

காரைக்குடி, நவ. 23: காரைக்குடி செஞ்சை பாப்பா பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இங்குள்ள கலைக்கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மஞ்சுளாவின் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் காளீஸ்வரன் மைனர் பெண்ணை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார்’ என கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுளாவை தேடி வருகின்றனர் .

Tags : College student kidnapping ,
× RELATED கல்லூரி மாணவி கடத்தல்