×

மரப்பாலம் புரண்டதால் கால்வாய் சேற்றில் சிக்கி தொழிலாளி பலி

திருக்கழுக்குன்றம், நவ. 23: திருக்கழுக்குன்றம் அருகே மழை நீர் கால்வாய் மேல்புறம் நடந்து செல்லுகையில் மரப்பாலம் திடீர் என புரண்டதில் தொழிலாளி கால்வாய் சேற்றில் சொருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருக்கழுக்குன்றம் அடுத்த தத்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (54). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற கன மழையால் ரங்கநாதனின் வீட்டின் பின்புறம் உள்ள கால்வாயில் மழை நீர் நிரம்பி ஓடியது. அந்தக் கால்வாய்க்கு அருகில் அவரது மாடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக அந்தக் கால்வாயின் குறுக்கே போடப்பட்டுள்ள மரப்பலகையை கடந்து செல்ல முயன்ற ரங்கநாதன் அந்த மரப்பலகை திடீர் என புரண்டதால் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்து சேற்றில் சொருகி  தத்தளித்து உயிரிழந்தார்.  
                       
சிறிது நேரம் கழித்து அவர் இறந்துக் கிடப்பதைக் கண்ட உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரது உடலை மீட்டனர். தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் அங்கு சென்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : carpenter ,
× RELATED விபத்தில் கார்பெண்டர் பலி இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி