பழநி, நவ.22: பழநியில் வாசன் பாசறை செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணிக்கண்ணன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் கனகசபாபதி, நகர தலைவர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர் மழையின் காரணமாக அணைகளில் சேமிக்கப்பட்டுள்ள நீரை முறையாக பயன்படுத்த வேண்டும். மழையால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் அதிகளவில் கொய்யா விளையும் பகுதியான ஆயக்குடியில் பழங்களை சேமித்து வைக்க குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். பழநியில் இருந்து கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் கவுன்சிலர்கள் முருகானந்தம், சுரேஷ், சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.