ஏர்வாடி நவ. 22: ஏர்வாடி 6வது தெருவில் நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு மீலாதுநபி விழா நடுமுஹல்லம் ஜமாத்தாரால் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நடுமுஹல்லம் ஜமாத் தலைவர் ஷாபி தலைமை வகித்தார். செயலாளர் ஜபருல்லா முன்னிலை வகித்தார். நடுமுஹல்லம் ஜமாத் நிர்வாகிகள் ஜபருல்லா, மீரான் மற்றும் சர்புதீன், இஞ்சி அசன், நாசர், கில்ட் கனி மற்றும் நடுமுஹல்லத்தார்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.