×

கரூர்- திருச்சி பைபாஸ் வெள்ளியணை பிரிவு சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் தொடர் விபத்துகள் ஏற்படும் அபாயம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கோரிக்கை

கரூர், நவ. 21: கரூர்- திருச்சி பைபாஸ் சாலையில் வெள்ளியணை பிரிவு சாலையில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கரூர்- திருச்சி பைபாஸ்சாலையில் வெள்ளியணை சாலையில் மேம்பாலம் உள்ளது. திருச்சி, மதுரை மார்க்கமாக சாலையில் வரும் வாகனங்கள் கரூர் நகருக்குள் வரவும், வெள்ளியணை ரூட்டில் செல்வதற்காகவும் பாலத்தின்கீழ் அணுகுசாலை உள்ளது. இந்த அணுகுசாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரதது அதிகம் காணப்படுகிறது. சாலைத்தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன.  இருந்தும் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக தாறுமாறாக செல்கின்றன. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்து மிகுந்த நேரங்களில் நிறுத்தப்பட்டு வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karur-Trichy Bypass Velliyanai Division Road ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் காற்றுடன்...