×

விவசாயம் செழிக்க வேண்டி சிவாலயத்தில் 108 சங்காபிஷேகம்

மேலூர், நவ. 20:  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகளுடன் மேலூர் அருகே சிவாலயத்தில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ள சங்கரலிங்கம், சங்கரநாராயண சுவாமி, கோமதியம்மாள் கோவிலில் கார்த்திகை மாத சோம வாரம் துவக்கத்தை முன்னிட்டு நேற்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சங்கரலிங்க சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகளுடன் கூடிய ஆராதனைகளும் நடந்தது. மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : 108 Sangaishekam ,
× RELATED கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்காபிஷேகம்