×

ஆணையர் அமுதா, கலெக்டர் பொன்னையா ஆய்வு

காஞ்சிபுரம், நவ.16:காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி சாலை, காமராஜர் சிலை அருகில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் அருந்துவது பயனளிக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்பி விஸ்வநாதன் தலைமை தாங்கி அப்பகுதியில் உள்ள வியாபாரிகள், முதியவர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என 153 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பத்மநாபன், சேரன், அருண், கோபால், முக்திலால், ராஜசேகரன், நாதன், கோதண்டராமன், விசு உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.

Tags : Amudha ,Collector Ponniyan ,
× RELATED தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள்...