×

ஆடு மேய்த்த பெண்ணை காட்டெருமை தாக்கியது

சத்தியமங்கலம், நவ.16: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கல்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சாயம்மாள்(45). இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். தினமும் அப்பகுதியில் வனத்தை ஒட்டியுள்ள பட்டாநிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம். பச்சாயம்மாள் நேற்று மதியம் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த காட்டெருமை எதிர்பாராதவிதமாக பச்சாயம்மாளை முட்டித்தள்ளியதில் மார்பில் காயம்பட்டு மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் காட்டெருமையை விரட்டி பச்சாயம்மாளை மீட்டு ஆம்புலன்சில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : shepherd ,
× RELATED குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு