×

டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

அரவக்குறிச்சி, நவ. 15: அரவக்குறிச்சி காவல் நிலையத்தில்,  டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு  சிசிடிவி பொருத்துதல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு  நடவடிக்கைகள் சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை மிளகாய் பொடி தூவுதல் உள்ளிட்ட பல்வேறு வகையில் கொள்ளையடித்துச் செல்லுதல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அடிக்கடி நடை பெறுகின்றது. இதில் ஈடுபடுபவர்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து தண்டிப்பதற்கு டாஸ்மாக் கடை களில் சிசிடி வி கேமரா பொருத்த காவல்துறை அறிவுறுத்துகின்றது. இது தொடர்பாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில்,  டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு  சிசிடிவி பொருத்துதல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு  நடவடிக்கைகள் சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அரவக்குறிச்சி காவல் நிலையத்தில்  டிஎஸ்பி முத்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.இதில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், இன்ஸ்பெக்டர் ஜெயமோகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Security Awareness Camp ,Taskmakers ,
× RELATED திருக்கழுக்குன்றம் - திருப்போரூர்...