×

வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை மருத்துவர் நியமனம்

நாமக்கல், நவ. 14:  தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், தற்காலிக அடிப்படையில் கால்நடை மருத்துவர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளதாக கலெக்டர்  தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் (என்ஏடிபி) மூலம் தற்காலிகமாக 6 மாதம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு அசல் சான்றிதழ்களுடன் இன்று (14ம் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, சேலம் தளவாய்ப்பட்டியில் உள்ள ஆவின் பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஆர்வமுடையோர் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : veterinarian ,
× RELATED விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு...