×

நெல்லிக்குப்பத்தில் கஞ்சா விற்ற 6 பேர் கைது

நெல்லிக்குப்பம், நவ. 8: நெல்லிக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதனை தடுக்க நெல்லிக்குப்பம் போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் செல்லும் முன் கஞ்சா விற்பனை செய்யும் ஆசாமிகள் தப்பி விடுகின்றனர்.
இந்நிலையில் நெல்லிக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்  தனித்தனி போலீஸ் குழு அமைத்து சாதாரண உடையில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினார். இந்நிலையில் நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி, சரவணபுரம், வைடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த ஆறு பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், வைடிப்பாக்கத்தை சேர்ந்த வீரமணி(20), பொன்முடி(18), அருள்பாண்டி(20), அசோக்(24), சரண்(18), ஜோயல்(21) என தெரியவந்தது.இவர்களிடமிருந்த 80 கிராம் கஞ்சா மற்றும் ஒரு பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : kanja ,
× RELATED சமூக விரோதி படத்துக்கு மறுதணிக்கை