×

கீழ்வேளூர் அருகே சுவரில் பைக் மோதி டாஸ்மாக் ஊழியர் பலி

நாகை,நவ.2: நாகை மாவட்டம் திருமருகல்  தேவங்குடி நடுத்தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுப்பரமணியன் (44). இவர் கீழ்வேளூர் அருகே உள்ள காக்கழனி டாஸ்மாக்கடையில்  விற்பனையாளராக உள்ளார். நேற்று முந்தினம் இரவு பணி முடித்து விட்டு கீழ்வேளூர் கடம்பங்குடி வழியாக  பைக்கில் ஊர் திரும்பினார். ஒக்கூர் அருகே சென்றபோது  நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த காம்பவுண்டு சுவற்றில் மோதியதில் சுப்பரமணியன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நாகை அரசு மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக  திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி  சுப்பரமணியன் உயிரிழந்தார். இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : bike employee ,wall ,Kilaveloor ,
× RELATED மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து...