×

2 வீடுகளை உடைத்து 35 சவரன், டிவி கொள்ளை

கூடுவாஞ்சேரி, நவ.2:கூடுவாஞ்சேரி அடுத்த சினிவாசபுரம் முதல் பிரதான சாலையில் வசிப்பவர் தேவராஜ் ஸ்டீபன் (37), இவர் மனைவி எபோரா சாரோன் (32) இவர்கள் இருவரும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் நேற்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு சென்றுவிட்டனர். பின்னர் மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பினர். அங்கு வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 28 சவரன் நகை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

இதேபோன்று கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு, பிருந்தாவனம் அவென்யுவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவர் மனைவி கங்காதேவி (36) இவர்கள் கடந்த 30ம் தேதி குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் நேற்று மாலை வீடு திரும்பியபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை, எல்சிடி டிவி, காஸ் சிலிண்டரை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

Tags : houses ,
× RELATED கொடைக்கானல்: மரம் விழுந்ததில் 2 வீடுகள் சேதம்