×

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு வயது ஆண் குழந்தை பரிதாப பலி

கூடுவாஞ்சேரி, மே.16: நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (30). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி கொடி (27), மகன் கபிலன் (1) ஆகியோர் உள்ளனர். இதில், இவர்களது தளம்போட்ட வீடு கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில், ஒரு வயது ஆண் குழந்தையான கபிலன் நேற்று முன்தினம் இரவு ஹாலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து கீழே விழுந்தது. இதில், கபிலன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியானான். இதனை கண்டதும் அவனது பெற்றோர் அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கபிலனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

The post வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு வயது ஆண் குழந்தை பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Manikandan ,Guduvancheri Abdullah Street ,Nandivaram Guduvancheri Municipality ,Kodi ,Kapilan ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...