×

பர்கூர் அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி, நவ.2: பர்கூர் அருகே கர்நாடகாவிற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசிரியுடன் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளி என்னுமிடத்தில் சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் ஒரு கண்டெய்னர் வேன் நிற்பதாக அப்பகுதி பொதுமக்கள் பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, அந்த வேனில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அரிசியை வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சேகரித்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்றதும், போலீசுக்கு பயந்து அப்பகுதியில் வேனுடன் போட்டு விட்டு சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து பர்கூர் போலீசார் கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு சென்று அந்த வேனையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Bargar ,
× RELATED பர்கூர் அருகே ஆந்திர எல்லையில் இருளர் இன மக்களின் வனதேவதை திருவிழா