×

தெருவிளக்குகள் எரியாததால் டேன்டீ தொழிலாளர்கள் அவதி


பந்தலூர்,நவ.1:பந்தலூர் அருகே தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்டம் கழகம் டேன்டீ சேரம்பாடி சரகம் 1 முதல் 4 வரை உள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு உள்ளது.இப்பகுதியில் தெருவிளக்கு எரியாததால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ள இப்பகுதியில் சேரங்கோடு ஊராட்சி மூலம் தெருவிளக்குகள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக தெருவிளக்கு எதுவும் எரியாமல் இருப்பதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தெருவிளக்குகளை உரியமுறையில் பராமரிக்க வேண்டுமென ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் தாக்குதலுக்கு உட்படுவர் எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாகயாக இப்பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பு பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dandee ,
× RELATED நாயக்கன்சோலை டேன்டீ பகுதிக்கு தார்...