×

பொன்னமராவதி அருகே அரசு பள்ளியில் நூலக வாசிப்பு தின நிகழ்ச்சி

பொன்னமராவதி, நவ.1: பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூலக வாசிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்புரை உள்ள மாணவ, மாணவிகள் ஒரு மணிநேரம் புத்தகம் வாசித்தனர். இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன் பள்ளியை பார்வையிட்டு புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார்.
இதில் பள்ளி துணைஆய்வாளர் வேலுச்சாமி, தலைமையாசிரியர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Ponnaravady ,Government School ,
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா