வேதாரண்யம்,நவ.1: வேதாரண்யத்தில் மருதுபாண்டியர்கள் மற்றும் பசும்பொன் தேவர் குருபூஜை விழா நடைபெற்றது. வேதாரண்யம் நகரம் மேலவீதியில் மின் விளக்குகளும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட மருதுபாண்டியர்கள், பசும்பொன் தேவர் ஆகியோரது படங்களுக்கு ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மருதுபாண்டியரின் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செந்தில், நகர இளைஞரணி காமராஜ், முக்குலத்து புலி மாவட்ட செயலாளர் லெனின், நகர செயலாளர் கிஷோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.